Ponmani Ponmanikku Naane

Ponmani Ponmanikku Naane Song Lyrics In English


பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்

பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்

பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்

மேலே மூடும் வானம் போல
நானும் மாற ஆசத்தான்
நாளப் பார்த்து மால போட
நானும் செஞ்ச பூஜைதான்

நேரம் வரும்போது
பாரம் இடம் மாறாதோ
தாரம் என ஆனா
தாகம் அது தீராதோ

அழகு செலயப் பார்த்து
அன்பாலே ஆச மீறலாச்சு
பவள இதழ சேர்த்து உன் மேலே
பாசம் கூடிப் போச்சு

அட ராசா உன்னை லேசா சேர்ந்தா
ராவும் பகலும் சொகமாச்சு

பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்


தானா வந்து மேலே சாஞ்சு
தேனா ஊற்றும் பூங்கொடி
மாமா இந்த நேரம் பார்த்து
நீயா வந்து தேன் குடி

கோடை மழை நானே
சூடும் வயல் நீதானே
வாடும் இதழ் பார்த்து
வாரி தர வந்தேனே

மயங்கி மயங்கி போனேன்
உன்னாலே மனச இழக்கலானேன்
தினமும் நெனச்சு நெனச்சு
உன்னாலே திசையை மறந்து போனேன்

அடி தேனே பாலே மானே மயிலே
தேடும் என்ன பாடும் குயிலே

பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்

பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு

பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்