Ponmani Ponmanikku Naane |
---|
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்
பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்
மேலே மூடும் வானம் போல
நானும் மாற ஆசத்தான்
நாளப் பார்த்து மால போட
நானும் செஞ்ச பூஜைதான்
நேரம் வரும்போது
பாரம் இடம் மாறாதோ
தாரம் என ஆனா
தாகம் அது தீராதோ
அழகு செலயப் பார்த்து
அன்பாலே ஆச மீறலாச்சு
பவள இதழ சேர்த்து உன் மேலே
பாசம் கூடிப் போச்சு
அட ராசா உன்னை லேசா சேர்ந்தா
ராவும் பகலும் சொகமாச்சு
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்
தானா வந்து மேலே சாஞ்சு
தேனா ஊற்றும் பூங்கொடி
மாமா இந்த நேரம் பார்த்து
நீயா வந்து தேன் குடி
கோடை மழை நானே
சூடும் வயல் நீதானே
வாடும் இதழ் பார்த்து
வாரி தர வந்தேனே
மயங்கி மயங்கி போனேன்
உன்னாலே மனச இழக்கலானேன்
தினமும் நெனச்சு நெனச்சு
உன்னாலே திசையை மறந்து போனேன்
அடி தேனே பாலே மானே மயிலே
தேடும் என்ன பாடும் குயிலே
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்
பனியும் கொதிக்குது
பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து
போயாச்சு
கனியும் தவிக்குது உன்ன நெனச்சு
கனவு தெனமும் வந்து நூறாச்சு
பொன்மணி பொன்மணிக்கு நானே
உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே
என்றாகி போனேன்