Ponnana Manam Engu |
---|
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
தாலிக்கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலிக்கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
சொந்தம் என்று வந்த பின்னே
சொர்க்கம் ஒன்று கேட்கிறது
நெஞ்சம் அது மஞ்சம்
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஏஆஹாஆஆ
அஹா ஹா அஹா ஹா ஆஹா ஹாஆ
எங்கோ ஒரு நாதம்
அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல்
நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன
மானே சுகம்தானே
இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
இதழின் நிறம் செம்மை
இரு கண்ணின் நிறம் வெண்மை
இடம் கொஞ்சம் மாறட்டுமே
அது தேனள்ளித் தந்தாலும்
நான் உண்ண மாட்டேனோ
இதழ் கொஞ்சம் சேரட்டுமே
அம்புலியில் கட்டிலிட்டு
செம்பவள மெத்தையிட்டு
ஆடுவிளையாடு
கம்பனுக்கு தூது சொல்லிக்
காவியங்கள் பாட வைப்பேன் இன்று
மனம் உண்டு
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
இருவர் : ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஹா ஆ ஆ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்