Ponvidhi |
---|
பொன் விதி
ஒன்றும் பூமியில்
இல்லை வழியாதே
பிழைத்திருக்கும் உன்
அறிவொன்றே உடன்
வரும் தெய்வம் வேறேது
நிலைத்திருக்கும்
பகலில்
வெல்லும் காக்கையெனில்
இரவில் வெல்லும்
ஆந்தைகள் தான் பகை
மேல் பாய பொறுத்திரு
நீ பலமே வாழ்வு எழுந்திடு
நீ பலவீனம் தான் மரணம்
விழித்திரு விழித்திரு
பூச்சியை
உண்ணும் தவளை
தவளையை விழுங்கும்
பாம்பு பாம்பை அடிக்கும்
பருந்து இதுதான் இயற்கை
நியதி ஹா ஹா ஹா ஹா
ஹா
துணிவே எதற்கும்
தொடக்கம் மனிதா பயந்தால்
எதுதான் நடக்கும் எழுடா
தடையை தூளாக்கி எறிடா
தீயென்றாலும்
காற்றென்றாலும்
நேர்கொண்டேதான்
மோது சூதை வெல்ல
விழித்திரு விழித்திரு
நெஞ்சை நிமிர்த்து
நேர்பட நின்று வஞ்சத்தை
அடி நொறுக்கு நாணுதல்
இல்லை நடுங்குதல் இல்லை
ரௌத்திரம் நீ பழகு
குன்னிந்தே
கிடந்தாள் மனிதநிலை
கோழைக்கு எதுவும்
கிடைப்பதில்லை
புற்களை புலிகள்
உண்பதில்லை புழுதியில்
சூரியன் மறைவதில்லை
ஜெயம் ஒன்றே நீ அறிவாய்
விழித்திரு விழித்திரு