Poo Malaranthathu

Poo Malaranthathu Song Lyrics In English




பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும்
சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும் என்ன
தயக்கம் மனமே

பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

முள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று மனித
ஜாதி மறந்தது

வேர்கள் கொஞ்சம்
ஆசைபட்டால் பாறையிலும்
பாதையுண்டு வெற்றி கொள்ள
ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு
வீடு உண்டு

துயரமென்பது
சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும்
போது சுகம் சுகம் சுகமே


பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

கண்களே கண்களே
கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நெஞ்சமே நினைவு
ஒன்றும் சுமையில்லை

உள்ளம் மட்டும்
ஓங்கி நின்றால் ஊனம்
ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கை
உண்டு ஓய்வுகொள்ள
நேரமில்லை

கவலை என்பது
மனதின் ஊனமே புதிய
வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே

பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும்
சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும் என்ன
தயக்கம் மனமே