Poo Meedhu |
---|
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
போ என்று
சொன்னால் வரும்
நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட
ஏன் தான் காயமோ
கண்ணீர்
கவிதைகள் இந்தக்
கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால்
கிளையும் சுமைகள் கூடுதே
உதிரும் கிளைகளோ மறந்து
காற்றில் போகுதே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
ஹே
உடைத்துப் பார்க்கும்
இதயம் உனது படைத்து
பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து
தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில்
உடையாதே உடையாதே
உடைத்துப் பார்க்கும்
இதயம் உனது படைத்து
பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து
தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில்
உடையாதே
காதல் போலவே
நோயும் எல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய்
பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
விலகும்போது
நெருங்கும் காதல் அருகில்
போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில்
பூட்டி விருப்பம்போல அது
வலி தரமோ ஆஆ ஹா
விலகும்போது
நெருங்கும் காதல் அருகில்
போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில்
பூட்டி விருப்பம்போல அது
வலி தரமோ
வேற வேற நா
நினைவு போகையில்
காதல் கொள்வது பாவம்
அது சேரும் வரையிலே
யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
போ என்று
சொன்னால் வரும்
நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட
ஏன் தான் காயமோ
கண்ணீர்
கவிதைகள் இந்தக்
கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால்
கிளையும் சுமைகள் கூடுதே
உதிரும் கிளைகளோ மறந்து
காற்றில் போகுதே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ