Poo Mudippadhum Pottu |
---|
பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
நான் பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை
யாரிடமும் சொல்லாதே
பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை
யாரிடமும் சொல்லாதே
பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
மரம் பிறந்தது முன்னாலே
கொடி பிறந்தது பின்னாலே
மரம் பிறந்தது முன்னாலே
கொடி பிறந்தது பின்னாலே
கொடி மரத்திலேறி கழுத்தை சுத்தி
படர்ந்ததம்மா தன்னாலே
கொடி மரத்திலேறி கழுத்தை சுத்தி
படர்ந்ததம்மா தன்னாலே
ஆத்தில் வந்த வெள்ளத்திலே
மிதந்து வந்த மாப்பிள்ளே
ஆத்தில் வந்த வெள்ளத்திலே
மிதந்து வந்த மாப்பிள்ளே
அன்னத்தையும் பார்ப்பதில்லே
என்னைப் பார்த்த கண்ணிலே
ஒரு அன்னத்தையும் பார்ப்பதில்லே
என்னைப் பார்த்த கண்ணிலே
பூ முடிப்பதும்
நான் பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை
யாரிடமும் சொல்லாதே
பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
மனசு மேலே மனசு வெச்சா
மயக்கம் வரும் தெரியுமா
நான் மயங்கி மயங்கி விழுந்ததெல்லாம்
உனக்கும் கூட புரியுமா
நீ ஆடி ஆடி நடப்பதெல்லாம்
அங்கே பார்த்த பழக்கமா
இல்லே ஆடுவதால் பொருத்தமான
ஜோடி உனக்கும் கிடைக்குமா
பூ முடிப்பதும்
நான் பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
சிங்கம் போல வாய்க்கும் என்று
மங்கை நானும் நினைக்கலே
அவர் தங்கமான குணத்தை கண்டு
தந்தை கூட மறுக்கலே
சிங்கம் போல வாய்க்கும் என்று
மங்கை நானும் நினைக்கலே
அவர் தங்கமான குணத்தை கண்டு
தந்தை கூட மறுக்கலே
எங்கள் வாழ்வை பிரிப்பதற்கு
எவரும் இன்னும் பிறக்கலே
எங்கள் வாழ்வை பிரிப்பதற்கு
எவரும் இன்னும் பிறக்கலே
இருவர் உண்டு இயற்கை உண்டு
இன்பம் உண்டு உலகிலே
இருவர் உண்டு இயற்கை உண்டு
இன்பம் உண்டு உலகிலே
பூ முடிப்பதும்
நான் பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை
யாரிடமும் சொல்லாதே
பூ முடிப்பதும்
பொட்டும் வைப்பதும்
யாருக்காக