Poo Pole Un Punnagaiyil Sad |
---|
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு சோகத்தில் பண் பாடுது
பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு கோபத்தில் நின்றாடுது
எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா