Poochudum Nerathile |
---|
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே
பொட்டிருந்த நெற்றியுடன்
பூவிருந்த கூந்தலுடன்
பொட்டிருந்த நெற்றியுடன்
பூவிருந்த கூந்தலுடன்
மையிருந்த கண்களுடன்
மறைத்து விட்டாயே
அன்னை முகம் பார்க்கலையே
அப்பாவை நினைக்கலையே
சின்னவளை எண்ணலையே
மன்னவரைக் காணலையே
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே
கை வளையல் மோதிரமும்
மஞ்சளோடு குங்குமமும்
கை வளையல் மோதிரமும்
மஞ்சளோடு குங்குமமும்
காற்சலங்கை சங்கிலியும்
செய்து வைத்தேனே
தாலி கட்டிப் பார்க்கலையே
தாயாகக் காணலையே
தங்கமகள் உன் முகத்தைப்
போகையிலும் பார்க்கலையே
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே