Poojaikkaga Vazhum |
---|
பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இளங்காற்றைத் தாங்காத
பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல்
தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம்
இது ரகசிய ரணம்
கண்களில் குளம்
அது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை
அது என்வசம் இல்லை
இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இல்லையெனும்
ஒரு குறை இதுவரை
இதயத்தில் எழுந்தது இல்லையே
விழிகளில் உலவிய
ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது
அவளின் முகதீபம்
பிரிய முடியாது
திருமுகம் நினைவினில்
பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ