Pookkal Rasithathu

Pookkal Rasithathu Song Lyrics In English


பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது
அது எப்போது
நதியில் நனைந்தது எப்போது
நிலவை ரசித்ததது எப்போது
இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது
இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஓ ஓ
பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போதுஓஓ

வானத்தை பார்த்து கிடப்பது எப்போது
கர்வம் கலந்து தொலைப்போம் அப்போது
வண்ணத்து பூச்சிகள் பிடிப்பது எப்போது
வயதை மறந்து சிரிப்போம் அப்போது

நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது
நம் வாழ்வியம் கலந்தது இணைப்போம் அப்போது

பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போதுஓஓ


வானவில் பார்த்து நின்றது எப்போது
நிறவெறி தொலைந்த உறக்கம் பார் அப்போது
ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது
நதி நீர் சண்டை கழிந்திடும் அப்போது

ஒரு பறவை என வானில் பறப்பது எப்போது
உன் தாய் என பூமிய உரந்திடு எப்போது

பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது
அது எப்போது
நதியில் நனைந்தது எப்போது
நிலவை ரசித்ததது எப்போது
இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது
இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஓஓஎப்போது
ஹோ ஓ ஓ ஓ அது எப்போதுஓஓ
எப்போது