Pookkalai Killi Vandhu |
---|
பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்
தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ
வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ
தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ
நேற்று கேட்ட
கூச்சல் எல்லாம்
மௌனமாகி கொள்கிறதே
ஆட்டம் போட்ட கூடம்
இன்று காலியாகி நிற்கிறதே
தாயும் அங்கே
தந்தை அங்கே ஏன்
அநாதை போல இங்கே
தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ
பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்
தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ
வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ
தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ
தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ