Pookkalai Killi Vandhu

Pookkalai Killi Vandhu Song Lyrics In English


பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்

தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ

வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ

தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ

நேற்று கேட்ட
கூச்சல் எல்லாம்
மௌனமாகி கொள்கிறதே
ஆட்டம் போட்ட கூடம்
இன்று காலியாகி நிற்கிறதே

தாயும் அங்கே
தந்தை அங்கே ஏன்
அநாதை போல இங்கே

தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ


பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்

தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ

வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ

தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ

தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ