Poomaalai Vaangi Vanthaan

Poomaalai Vaangi Vanthaan Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ

பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை
வாங்கி வந்தான் பூக்கள்
இல்லையே

செவி இல்லை
இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு
விளக்கெதற்கு நாளும் நாளும்
அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம்
பிடித்து விட்டான் இனிக்கின்ற
விஷத்திற்குள் விழுந்து
விட்டான்

ராகம் தாளம்
மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை
கிழித்துவிட்டான்

கடற் கரை எங்கும்
மணல்வெளியில் காதலி
காலடி தேடினான் மோகனம்
பாடும் வேளையிலும் சிந்துவில்
ராகம் பாடினான் விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்
விழுந்திட


பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள்
எடுத்துவிட்டான் குடிக்கின்ற
கோப்பையை உடைத்து
விட்டான்

மீண்டும் அவள்
முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று
உடைத்துவிட்டான்

இசைக்கொரு
குயில் என்று ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ இசைக்கொரு
குயிலென்று பெயரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்
பிடித்தான் மனிதர்கள் இருப்பதை
மறந்துவிட்டான் மானத்தின்
மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில்
போகின்றான் தன்முகமே
தான் மறந்தான் சூடவும்
தோளில்லை ஆளில்லை
இவன் அன்று

பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு
இசை எதற்கு விழி இல்லை
இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள்
நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே பூ மாலை
வாங்கி வந்தான் பூக்கள்
இல்லையே யே யே