Poomarathu Nizhalumundu

Poomarathu Nizhalumundu Song Lyrics In English


பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ

பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ

தங்கமணித் தொட்டிலுண்டு
தனி வயிரப் பந்தலுண்டு
கண் நிறைந்த மஞ்சம் உண்டு
தாலேலோ தாலேலோ
நாம் கடவுளுக்கு
நன்றி சொல்வோம் தாலேலோ

காக்கை குருவிகள்
உன் தோழர்கள் கண்ணே
காற்றும் மழையும்
உந்தன் சேவகர் கண்ணே
வானம் கூரையென அமைந்தது கண்ணே
வானம் கூரையென அமைந்தது கண்ணே
வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே
வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே

பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ

ஆடை அணிமணிகள்
ஆயிரம் கோடி
ஆடிடும் நந்தவனம்
வரும் உன்னைத் தேடி

ஆடை அணிமணிகள்
ஆயிரம் கோடி
ஆடிடும் நந்தவனம்
வரும் உன்னைத் தேடி
சூடும் மலர்கள் உனை
வாழ்த்திடும் பாடி
சூடும் மலர்கள் உனை
வாழ்த்திடும் பாடி
துயில் கொள் சிறுகிளியே இமைகளை மூடி


தங்கமணித் தொட்டிலுண்டு
தனி வயிரப் பந்தலுண்டு
கண் நிறைந்த மஞ்சம் உண்டு
தாலேலோ தாலேலோ
நாம் கடவுளுக்கு
நன்றி சொல்வோம் தாலேலோ

தாயும் மகனும் இங்கே
தனித்திருப்போமே
தலைவன் வரவை எண்ணித்
தவம் புரிவோமே

தாயும் மகனும் இங்கே
தனித்திருப்போமே
தலைவன் வரவை எண்ணித்
தவம் புரிவோமே

மாயக்கலை பயிலப்
பள்ளி செல் கண்ணே
மாயக்கலை பயிலப்
பள்ளி செல் கண்ணே
மங்கல சாத்திரங்கள்
அறிந்துக் கொள் முன்னே

பெண்கள் : நாளை வரும் உலகினிலே
நான்கு வகைப் பருவங்களும்
மாறி வரும் கண்மணியே
ஆராரோ ஆராரோ
இதில் வாழும்வகை
காண்பவர்கள் யார் யாரோ