Poomudithu Pottu Vaitha

Poomudithu Pottu Vaitha Song Lyrics In English


பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும் கை தீண்டினால் தான் கல்யாணி பாடும் எழுதாத புது இலக்கியம் உயிர்க் காதலில் விளையும் இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும் கானக் கருங்குயிலே ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில் ஆனந்தப் பூஜை தொடங்குமோ

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா




கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி நிறுத்தாமல் மலர்க் கணைகளை விடும் வாலிபம் இதுதான் அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா