Poongaatre Dhinamum Theduren (Duet)

Poongaatre Dhinamum Theduren (Duet) Song Lyrics In English


பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்

பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்

உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்

பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்

மாஞ்சோலையில் மைனா ரெண்டு முத்தாடுது மையல் கொண்டு உன்னைத் தொட முத்தமிட நெஞ்சில் ஒரு ஆசை உண்டு

மாமாவுக்கு பொன்னுத்தாயி போட்டிடவா பட்டுப் பாயி ம்ம் பந்தலிட்டு மேளம் கொட்டு ஊரறிய தாலிக்கட்டு

ஏழு ஜென்மம் வாழும் இந்த நேசம் விலகாது வேறு கைகள் தீண்டி இந்த ஜீவன் நிலைக்காது

அடி எந்நாளும் கொண்டாடும் சொந்தம் இது முன்னாளில் உண்டான பந்தம் ஒரு கண்ணாலம் கச்சேரி காணும் நல்ல பொன்னாலும் கைக்கூட வேணும்

பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே ஹோ தனியா வாடுறேன்


தாலாட்டத்தான் தங்கராசா தன்னாலத்தான் வந்த ரோசா சுட்டுவிரல் பட்டவுடன் மொட்டு விட்டு வாய் வெடிச்சா

நோகாமத்தான் கிள்ளி கிள்ளி நெஞ்சாரத்தான் அள்ளி அள்ளி முத்துமணி சித்திரமே குத்தமென்ன தேன் குடிச்சா

மோகம் வந்த போதும் இந்த வேகம் உதவாது பானை வச்ச பாலைக் கண்டு பூனை விலகாது

அடி அம்மாடி ஆத்தாடி நீதான் எல்லையில்லாத பொல்லாத ஆள்தான் உன்னை சும்மாலும் கண்ணால பாத்தா மனம் கும்மாளம் போட்டாடும் ஆத்தா

பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்

உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்

பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்