Poonguyilum Paaduthu Ponmayilum

Poonguyilum Paaduthu Ponmayilum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது
வரப்புக்குள்ளே ஒளிஞ்சுகிட்டு
வயலுக்குள்ளே மறைஞ்சுகிட்டு
நெல்லுமணி ஜதி போடுது
பூமி புது வசந்தத்தப் பாடுது
நெல்லுமணி ஜதி போடுது
பூமி புது வசந்தத்தப் பாடுது

பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது

கரிசக்காட்டு மண்ணுமேலே
கலகலன்னு மழை பொழிஞ்சா
பூமிக்கெல்லாம் அன்று முதல் வசந்தம்

மொட்டுவிட்ட மல்லிகைப்பூ
இஷ்டப்பட்டு வாசமிட்டா
தோட்டத்திலே அன்னிக்குத்தான் வசந்தம்

கன்னிப் பொண்ணு காத்திருந்து
மாமனத்தான் பாத்திருந்து
கைப்பிடிக்கும் கல்யாண நாள் வசந்தம்

இனி பொன்வசந்தம்
பூவசந்தம் இது முதல் வசந்தம்


பூங்குயிலும் பாடுது
பொன்மயிலும் ஆடுது

ஊரிலுள்ள ஆளுங்கெல்லாம்
ஒத்துமையா வாழ்ந்திருந்தா
நாட்டுக்கது நல்லதொரு வசந்தம்

கங்கையிலே வந்த தண்ணி
காட்டு வழி ஓடிவந்து
காவிரியில் கூடுச்சுன்னா வசந்தம்

மண்ணப் பார்த்து வெதவெதச்சு
கண் முழிச்சு பாடுபட்ட
ஏழைக்கெல்லாம் அறுவடை நாள் வசந்தம்

இனி பொன்வசந்தம்
பூவசந்தம் இது முதல் வசந்தம்