Poonkaathu Adhu |
---|
இருவர் : லல லல்லால்லால லாலா
லல லல்லால்லால லலலா
இருவர் : ஏஹேஹே ஹேஹோய்
ஏய் ஹேய் பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கேஹே
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே ஹே
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
உல்லாச மலர்களை போல்
நாம் எப்போதும் சிரித்திருப்போம்
சிரிக்கும் பூவுதான்
காதில் ஆடுது பாடுது
சந்தோஷ கதவுகளை
நாம் சொல்லாமல் திறந்திடுவோம்
திறந்த உள்ளம்தான்
வாழ்வில் நல்லது நல்லது
தோள் கொடுக்க நண்பன் இங்கு
பக்கம் வந்தால்
இன்பம் என்ன துன்பம் என்ன
ரெண்டும் ஒன்றேதான்
உள்ளம் ரெண்டும் அன்பு கொண்டு
சேர்ந்து நின்றால்
பள்ளம் என்ன மேடும் என்ன
ரெண்டும் ஒன்றேதான்
வானம் கொண்ட நீல நிறம்
அதை விட்டு விட்டு போகாதப்பா ஹோய்
நம்முடைய நட்பின் நிறம்
அந்த வானம் போல மாறாதப்பா
இருவர் : பூ வானத்தில் பாடல்
போர் களத்தில் வாள்கள்
ரெண்டும் இந்த நண்பன் அல்லவா
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
இருவர் : ஏஹேஓ ஹோ
ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை
நமக்கு தாலாட்டு ஒன்றுதானே
ராகம் மலரும்
நேசம் மாறுமா மாறுமா
யார் யாராக பிறந்தாலும்
நமக்கு வேண்டியது அன்புதானே
சாமி மாறலாம்
பூமி மாறுமா மாறுமா
அன்பு உள்ளம் கொண்டு இங்கு
நீ இருந்தால்
சுட்டெரிக்கும் பாலைவனம்
சோலை ஆகாதோ
நல்ல மனம் பூமியிலே
உள்ள வரை
சுற்றி சுற்றி மேகம் வந்து
தூறல் போடாதோ
ஓடும் நதி போலவே
இந்த மண்ணில் நாம் ஓடலாம் ஹா
சேரும் கடல் போலவே
இங்கு அன்பில் நாம் கூடலாம்
இருவர் : மூச்சிருக்கும் நாட்கள்
மண்ணில் கொஞ்சம் நாட்கள்
என்றும் வரும் சொந்தம் அல்லவா
இருவர் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே ஹேய்
இருவர் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே
இருவர் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே
இருவர் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு