Poovagi Kaayagi

Poovagi Kaayagi Song Lyrics In English


பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்ன மரம்
கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனம் இருந்தும்
பிள்ளைக் கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு
மற்ற சுகம் இல்லை

பெற்றெடுக்க மனம் இருந்தும்
பிள்ளைக் கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு
மற்ற சுகம் இல்லை


சுற்றமென்னும் பறவையெல்லாம்
குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும்
பேறு மட்டும் இல்லை
பேறு மட்டும் இல்லை

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

வேண்டும் என்று கேட்பவர்க்கு
இல்லை இல்லை என்பார்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும்
அள்ளி அள்ளித் தருவார்

ஆண்டவனார் திருவுளத்தை
யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார்
யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று