Poovagi Kaayagi Sad |
---|
பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்ன மரம்
கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா
பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்
திருப்பிக் கேட்கவில்லை
உறவையெல்லாம் வாழவைத்தேன்
கடனைக் கேட்கவில்லை
ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்
திருப்பிக் கேட்கவில்லை
உறவையெல்லாம் வாழவைத்தேன்
கடனைக் கேட்கவில்லை
எனக்குத் தந்த செல்வத்தையே
திருப்பிக் கேட்க வந்தார்
எனக்குத் தந்த செல்வத்தையே
திருப்பிக் கேட்க வந்தார்
இந்தச் செல்வம் திருப்பித் தரும்
செல்வமில்லை கண்ணே
செல்வமில்லை கண்ணே
பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று