Poovai Poovai Uthiruthadi |
---|
கோவர்த்தன கிரியைக் குடையாய் பிடித்த
அந்தக் கோபாலக் கிருஷ்ணன் இவர்தானாஓஓ
கோபியர் புடைசூழப் புல்லாங்குழல் எடுத்துக்
கொடுப்பாரோஓஇசைப் படிப்பாரோஓ
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
வாலிப உடம்பு நனையுதடி
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப உடம்பு நனையுதடி
வாத்தியார் மனம் குளிருதடி
காமனோ இல்லை அவன் மாமனோ
கன்னியரைக் காதல் சிறையெடுக்கும்
தேவனோஓ
கன்னி இளம் மடியினிலே துள்ளி விளையாட
அந்த கண்ணான கண்ணன்
இளம் பாலனோஓ
கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக்
காரினில் ஏறிய பரந்தாமா
பரந்தாமா
கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக்
காரினில் ஏறிய பரந்தாமா
கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து
எஹேய் எஹேய் அஹேய்
கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து
கண்ணுக்கு ஆசை வரலாமா
கண்ணுக்கு ஆசை வரலாமா
பூவாய் பூவாய் உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
வாலிப உடம்பு நனையுதடி
வாத்தியார் மனம் குளிருதடி
புல்லாங்குழலடியோ
பூபாலன் நானடியோ
காமன் மகனடியோ
கைப்பிடித்து பாரடியோ
கைப்பிடித்து பாரடியோ
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஹ ஹ ஹா
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
சாவி என் கையில் இருக்குதடி
நான் தந்தால்தான் அது திறக்கும்மடி
தந்தால்தான் அது திறக்கும்மடி
ஹ பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
ஜில்ஜில் ராணி ஜில் ராணி
ஜிலு ஜிலு ராணி ஜில் ராணி
ஆயிரம் படிப்பு படித்தாலும்
ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி
ஏ ருக்கு ஏ சக்கு ஏ மக்கு
ஆயிரம் படிப்பு படித்தாலும்
ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி
ஆடவன் ஒருவன் இருந்தாலே
காரியம் நன்றாய் நடக்குமடி
உன் காரும் பாதையில் பறக்குமடி டுர்ர்ர்
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி
கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா
கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா
கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா
சைசா கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா
ஆனந்த நதியில் நீந்தட்டுமா
ஆனந்த நதியில் நீந்தட்டுமா
அங்கு அம்மம்மா என்று பேசட்டுமா ஹா
பூவாய் பூவாய் உதிருதடி
புன்னகை அழகு ஜொலிக்குதடி