Poovarasam Poovaai

Poovarasam Poovaai Song Lyrics In English


பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே



பறக்கிறேன் வானிலே
என் மாற்றங்கள் தெரியுதா
பனைமர தோழனே
என் பரவசம் புரியுதா

நிலா உன் புன்னகை
அது சம்மதம் சூடுமோ
நிலாமறை கிணறு நீ
மன ஆழத்தை தேடவா
நீ கதைக்கிற வார்த்தைகள்
அது காதலின் திருக்குறள்
உன் கண்களோ காவியம்
அது கந்தரோடை உள் பொருள்

பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே


உரும்புரை மண்ணை போல்
உன் உதடுகள் சிவப்படி
நீ கோதிடும் கூந்தலே
சங்கிலியின் தோப்படி

செம்மலையை செதுக்கியே
செய்தெடுத்த சிலையடி
அடி செம்மணி வெளியிலே
புதைக்காத அன்படி

பசுக்குட்டி சுனையடி
உன் பார்வைகள் தரும் வலி
மனம் மணலாய் கரைகிறேன்
இப்ப நானொரு குளிர்கலி

பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே