Poovarasam Poovaai |
---|
பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே
பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே
பறக்கிறேன் வானிலே
என் மாற்றங்கள் தெரியுதா
பனைமர தோழனே
என் பரவசம் புரியுதா
நிலா உன் புன்னகை
அது சம்மதம் சூடுமோ
நிலாமறை கிணறு நீ
மன ஆழத்தை தேடவா
நீ கதைக்கிற வார்த்தைகள்
அது காதலின் திருக்குறள்
உன் கண்களோ காவியம்
அது கந்தரோடை உள் பொருள்
பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே
பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே
உரும்புரை மண்ணை போல்
உன் உதடுகள் சிவப்படி
நீ கோதிடும் கூந்தலே
சங்கிலியின் தோப்படி
செம்மலையை செதுக்கியே
செய்தெடுத்த சிலையடி
அடி செம்மணி வெளியிலே
புதைக்காத அன்படி
பசுக்குட்டி சுனையடி
உன் பார்வைகள் தரும் வலி
மனம் மணலாய் கரைகிறேன்
இப்ப நானொரு குளிர்கலி
பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே
பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே