Poove Siru Poove |
---|
பெண் ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஅஆ
பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
மானே என் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே
தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
ஏதோ ஏதேதோ எங்கோ எப்போதோ
ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு என்றே வாழ்கிறோம்
ஜீவன் ஒன்றானால் யாவும் ஒன்றாகும்
காதல் கொண்டு காலம் வென்று யாவும் ஆள்கிறோம்
வானும் இந்தக் காற்றும்
நம் வாழ்வைப் போன்றது
வாழும் இந்த பூமி புது மேடை போட்டது
மாறாமல் நாளும் நாம் வாழும் கோலம்
அழியாது அன்பே அன்பே
பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
பெண் பா பப்பப்ப பாப
பா பப்பப்ப பபபப
பா பப்பப்ப பாப பபப் பப்ப பபபப
பா பப்ப பபப்பா பபப் பப்ப பபப்பா
நானும் நீ என்று நீயும் நான் என்று
மாறும் அந்த நேரம் என்று வாழ்த்தும் பாடுதே
ஆசை நெஞ்செல்லாம் ஆடும் பூந்தோட்டம்
வாசம் வந்து வீசும் போது மோகம் பாடுதே
நாளை எந்த நாளும் நம் நாளாய் தோன்றுதே
மாலை வந்து சூடும் பொன் நாளாய் ஆனதே
வேராய் நின்றேனே நீராய் வந்தாயே
இது போதும் அன்பே அன்பே
தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
மானே உன் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே
பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே