Poovendrum Ponne Endrum |
---|
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன
நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன
தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே
பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்
கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்
கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே
பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும்
பொன்னோடம்தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்