Poovinai

Poovinai Song Lyrics In English


பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுகள் தீர்வதில்லைஈ

காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமேஏ


இதய கூட்டை பூட்டிக்கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருசங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்

ஆண் மற்றும்
நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்

ஆஆகா ஆஹாஹா ஆஅ
ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீம் ஹும்ம்ம்