Poovizhi Vaasalil

Poovizhi Vaasalil Song Lyrics In English


பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது

மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுது
துடிக்கும் இளமை
தடுக்கும் பெண்மை

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
ஆஹா
இளங்கிளியே கிளியே
ஆஹா
அங்கு வரவா தனியே
ஆஹா
மெல்ல தொடவா கனியே
ஆஹா
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
ஆஹ்ஹா

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது

கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும்
பொருத்தம் தானே


பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே

கலைந்தாடும் கூந்தல்
பாய் போடுமோ
கலை இது அறிமுகம்
வேண்டுமா

அசைந்தாடும் கூந்தல்
நாமாகவோ
நவரச நினைவுகள்
போதுமா

பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும்
துடிக்கும்
சிலிர்க்கும் மேனி

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
ஆஹா
இளங்கிளியே கிளியே
ஆஹா
இங்கு வரலாம் தனியே
ஆஹா
மெல்ல தொடலாம் எனையே
ஆஹா
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே
ஆஹ்ஹா