Poovoma Oorgolam

Poovoma Oorgolam Song Lyrics In English


விஷ்லிங் :

போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும் ஓடும்
பொன்னி ஆறும் பாடும்
கானம் நூறும் காலம்
யாவும் பேரின்பம் காணும்
நேரம் ஆனந்தம் போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும்

அரண்மனை
அன்னக்கிளி தரையில
நடப்பது நடக்குமா
அடுக்குமா

பனியிலும்
வெட்டவெளி வெயிலிலும்
உள்ள சுகம் அரண்மனை
கொடுக்குமா

குளுகுளு
அறையில கொஞ்சிக்
கொஞ்சி தவழ்ந்தது
குடிசைய விரும்புமா

சிலுசிலு
சிலுவென இங்கிருக்கும்
காத்து அங்க அடிக்குமா
கிடைக்குமா

பளிங்கு போல
உன் வீடு வழியில
பள்ளம் மேடு

வரப்பு மேடு
வயலோடும் பறந்து
போவேன் பாரு

அதிசயமான
பெண்தானே

புதுசுகம்
தேடி வந்தேனே

போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும் ஓடும்
பொன்னி ஆறும் பாடும்
கானம் நூறும் காலம்
யாவும் பேரின்பம் காணும்
நேரம் ஆனந்தம் போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும்

கொட்டுகிற
அருவியும் மெட்டுக்கட்டும்
குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில்
மிதக்குது கண்டதையும்
ரசிக்குது இதிலென்ன
ஒரு சுகம்


ரத்தினங்கள்
தெறிக்குது முத்துமணி
ஜொலிக்குது நடந்திடும்
நதியிலே

உச்சந்தல
சொழலுது உள்ளுக்குள்ள
மயங்குது எனக்கொன்னும்
புரியல

கவிதை பாடும்
காவேரி ஜதிய சேர்த்து
ஆடும்

அணைகள் நூறு
போட்டாலும் அடங்கிடாமல்
ஓடும்

போதும் போதும்
உம் பாட்டு

பொறப்படப்
போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஓடும் பொன்னி
ஆறும் பாடும் கானம்
நூறும்

காலம் யாவும்
பேரின்பம் காணும் நேரம்
ஆனந்தம்

போவோமா
ஊர்கோலம்

பூலோகம்
எங்கெங்கும்