Poovum Thendral Katrum

Poovum Thendral Katrum Song Lyrics In English


பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ

விதி யார் அறிவார்
வினை யார் அறிவார்
எதுதான் முடிவு
அவன்தான் அறிவார்

மனம் என்ற மாய
வீடு புரியாத ஒன்று
விரல் மீட்டும் வீணை ஒன்று
சுதி மாறிப் பாடுது
மாறாதது மயக்கம் மயக்கம்

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ


உலகைப் புரிந்தும்ம்ம்ம்
மனதில் மயக்கம்ம்ம்ம்ம்
விடிந்தால் கூட இரவைத் தேடும்
ஒரு பாதை போன கால்கள்
திசை மாறிப் போவதேன்

கடல் மூழ்கிப் போன ஓடம்
கரை சேரப் பார்ப்பதென்ன
யார் சொல்வதோ
விளக்கம் விளக்கம்

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ