Poraale |
---|
போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே
அடி ஒண்ணுமே புரியலையே உலகமும் தெரியலையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொறுப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா
போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
ஓஓஓஓஓஓ
மனசாற முகம் பாத்தா
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணை போட முடியாம
ஆசை எல்லாம் தெறந்து வெச்சோம்
இந்த காடெல்லாம் மேடெல்லாம்
கால் தடத்த பதிச்சு வெச்சு
கரட்டு வழி இருட்டு வழி
கண்டபடி திரிஞ்சு வந்தோம்
ஒரு ராத்திரியும் தூங்குனதா
நமக்கொரு கதையுமில்ல
அட ராப் பாகலும் தெரியவில்ல
நமக்கது புதுசுமில்ல
அதெல்லாம் பழைய கதை
அத நீ ஏன் மறந்த
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த
போனாலும் போகலையே
என் நெனப்பிலும் நீதான்
நெழலிலும் நீ தான்
மாறலையே ஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓ
ஓஓஓ
தானே நன்னா தானே நன்னா
ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்
உன் நெனப்ப ஒளிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா
ஒறவ அத்து தவிச்சதில்ல
இதில் யாரோட கண்ணு பட்டு
பிரிஞ்சது நம்ம பிடி
இது விதியோட விளையாட்டா
விழுந்தது பெரிய பழி
என் வேதனைய எடுத்துச் சொன்னா
வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா
உனக்கும் புரியுமடி
உசுரே நடுங்குதய்யா
உன்ன நெனச்சபடி
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி
போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே
அட ஒண்ணுமே புரியலையே
உலகமும் சரியில்லையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பு இதுக்கு யார் பொறுப்பு
மனசே எரியுதய்யா என்னச் சுத்தி சுடு நெருப்பு
போனாளே போனாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போனாளேஏ