Poravale Ponnuthayi |
---|
போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி
தேடி வந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி
கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச ஊருக்கெல்லாம் தெரியுமடி
மூக்குத்தி முத்தழகி வாக்கு மறந்ததென்ன பூவெல்லாம் நீதானே பொழுதெல்லாம் நெனைச்சேனே தொட்டுப் பேசி விட்டுப் போனா கெட்டப் பேரு யாருக்கு
போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி
ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியேஏ
மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும்
போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி