Poravathan Ponnuthayi |
---|
போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி
தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி
போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி
கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச உறவுக்கெல்லாம் பொறுக்கலையே
மூக்குத்தி உறுத்துதய்யா வாக்கு மறந்தேனய்யா பூஜைக்கு ஆகாமே பூவொண்ணு பூத்தேனே தொட்டுப் பேசி விட்டுப் போறேன் கெட்டப் பேரு யாருக்கு
போறவதான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி
ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே
மையல வெதச்சு வச்சேன் மண முடிக்க நேரமில்ல மரத்தோட படரத்தானே கொடிக்கும் ஒரு யோகமில்ல கரை தேடி ஒரு ஓடம் தெசை மாறிப் போகுதய்யா ஒன்னால உருவாச்சு உனக்காக சருகாச்சு உயிரோடு உயிர் சேரும் ஒரு காலம் வந்திரும்
போறவத்தான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி போறவத்தான் பொன்னுத்தாயி வாடாதய்யா என்னைத் தேடி தேடி வந்த சோடிக் கிளி கூட்ட விட்டு போகுதடி