Pothigaimalai Santhaname |
---|
ஆஆஆஆஅஆஅஆ
ஹாஆஆஆஅ
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்
மணமகள் நானாவேன்
மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்
மணமகள் நானாவேன்
பஞ்சணையில் உனைக் கொஞ்சுகையில்
பசும் பாலினில் பழமாவேன்
இசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில்
தமிழ் வீணையைப் போலாவேன்
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கை வளையும் இரு மை விழியில்
அந்தக் கலையினில் அரங்கேற
இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு
விளையாடட்டும் மெதுவாக
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே