Pournami Nilavil |
---|
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே
நெஞ்சம் முழுதும்
கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது
துள்ளும் இளமை பருவம் நமது
தொட்டு தழுவும் சுகமோ புதிது
கண் பார்வையே உன் புதுப்பாடலோ
பொன் வீணையே உன் பூமேனியோ
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்
பன்னீர் மழைதான்
விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
தன்னந் தனிமை
தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க
பொன்னோவியம் என் மனமேடையில்
சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்
இருவர் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்