Pournami Nilavil

Pournami Nilavil Song Lyrics In English


பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும்
கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது

துள்ளும் இளமை பருவம் நமது
தொட்டு தழுவும் சுகமோ புதிது

கண் பார்வையே உன் புதுப்பாடலோ

பொன் வீணையே உன் பூமேனியோ


பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

பன்னீர் மழைதான்
விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

தன்னந் தனிமை
தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க

பொன்னோவியம் என் மனமேடையில்

சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்

இருவர் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்