Pudhu Nadagathil |
---|
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு ஓஹோ ஓஹோ
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்
ஒத்திகையில் தூங்கி விட்டாள்
ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரை கண்டாள்
அது நான்தான் எவருமில்லை
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம் இல்லை
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம் இல்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா புரியவில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா புரியவில்லை
வந்த இடம் நல்ல இடம்
வந்தால் தெரிந்து விடும்
அந்த சுகம் என்னவென்று
வாழ்ந்தால் புரிந்து விடும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு ஓஹோ ஓஹோ
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்