Pudhu Unarve |
---|
புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே
எனை நான் உள் காண
உன்னை இசையாக்கி
அதிர்வின் மொழியாய் நின்றாய்
அதில் நீ இசை என்று நான் ஒளி என்று
நீயே சொன்னாய்
புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே
அழகான ஒரு தருணம்
இது எந்தன் நாட்களிலே
நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே
என் உள்ளே நான் கண்ட
முதல் பிம்பம் உன் ஸ்பரிசம்
உணர்ந்தேனே உயிர் மாற்றம்
நான் தேடும் உறவே
நானும் இனிதே
அன்பால் என்னை அனைத்தாயே
நாளும் இந்த ராகம்
நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா
புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே
வரமாக நீ கிடைத்தால்
ஸ்வரமாக நான் பொழிவேன்
தவமான என் தேடல் நீயே உயிரே
உன்னை காணும் நாள் முழுதும்
கூடுதே ஆயுள் பலம்
என் உயிரில் நீ ஸ்வாசம்
உன்னோடு இங்கு நான் காணும் உலகே
வாழ்வினிலே பரவசமே
நாளும் இந்த ராகம்
நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே
புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் இதை ரசிக்கிறதே
எனை நான் உள் காண
உன்னை இசையாக்கி
அதிர்வின் மொழியாய் நின்றாய்
அதில் நீ இசை என்று நான் லயம் என்று
வரம் நீ தந்தாய்
இருவர் : புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் இதை ரசிக்கிறதே