Pularum

Pularum Song Lyrics In English


ஹாஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅ

புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ

மனதை சூழும்
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே
மழலை சொல்லில்
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே

ஒஹ்ஹஒஹ்ஓஹ்ஓஒ
ஒஹ்ஹஒஹ்ஓஹ்ஓஒ

காற்றில் நீ கை அசைத்தால்
ஓவியம் தோன்றுதே
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்
கவிதை ஆகுதே

நான் உன்னை தோளில் தூக்க
பாரங்கள் தீருதே
நாளையும் வாழ வேண்டும்
ஆசை தூண்டுதே


வேற் யாரு என்ற போதும்
என் அன்பு ஒன்று ஏராளமா
ஏராளமா
உன் தாய் என்று உறவாட
என் தாரம் தாராளமாஆஆ

வீடென்ற ஒன்று இன்று
உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம்
பார் எந்தன் கண்ணோரமா

மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி

மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி

புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ