Punjai Undu

Punjai Undu Song Lyrics In English


தந்தன் னானா
தந்தன் னானா
தந்தன் னானா
தானா

ஹோய் தந்தன் னானா
தந்தன் னானா
தந்தன் னானா
தந்தன் னானா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின்
சோத்துச் சண்டை தீரவில்லே

வீதிக்கொரு கட்சி உண்டு
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும்
இங்கு நாதி இல்லே
சனம் நிம்மதியா
வாழ ஒரு நாளுமில்லே

இது நாடா இல்லே
வெறும் காடா
இதக் கேக்க யாரும்
இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின்
சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும்
உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு
இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது

எத்தனை காலம்
இப்படிப் போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம்
யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்


ஆயிரம் கைகள் கூடட்டும்
ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு
நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும்
எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின்
சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு
யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி
யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது

எண்ணிய யாவும்
கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும்
சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின்
சோத்துச் சண்டை தீரவில்லே

இது நாடா இல்ல
வெறும் காடா
இத கேக்க யாரும்
இல்லே தோழா