Punnagai Thavazhum |
---|
புன்னகை தவழும் மதி முகமோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணில உமிழும் நிறை மதியோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணில உமிழும் நிறை மதியோ மதி மயக்கும்
புன்னகை தவழும் மதி முகமோ
என்னுள்ளம் கவர் வேந்தன்
கைவரிசையோஓஓஓஏஏ
என்னுள்ளம் கவர் வேந்தன்
கைவரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
புன்னகை தவழும் மதி முகமோ
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே ஏஏ
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடி
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடி
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடிஈஈ
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
என் பாங்கி கணத்தில் மறையுதடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
ஆஆஆஆஅஆஅ
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே ஏஏ
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடா
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா
பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே
பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன்
உயர் கீதம் அமுதம் நேருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன்
உயர் கீதம் அமுதம் நேருமே
பாவை உன்னை பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே
பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்
பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்
பக்குவம் அடையாத பதம்பெற காயாத
பாலுக்கு சுவையேது பாலுக்கு சுவையேது
இருவர் : பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்
பாரினில் பெரும் ஆனந்தம்