Purushan Veetil Vaazha Pora Ponney |
---|
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும்
அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
மாமியாரை மாமனாரை மதிக்கணும்
உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சு சாணம் தெளிச்சு கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுங்க ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
தார வார்க்க நான் இருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
புருஷன் கூட நீ இருந்து
பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சுகிட்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து
மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி