Putham Puthiya Puthagamae |
---|
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று
புதிதாய் வந்த மாணவி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று
புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
அஞ்சுவிரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன
அஞ்சுவிரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
கொத்து மலர்ச் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
கொத்து மலர்ச் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே