Raamanukke Seethai |
---|
ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
நிலவில்லாமல் எது வந்தாலும்
அல்லி மலருமா
நிலவில்லாமல் எது வந்தாலும்
அல்லி மலருமா
அது நிலவைத் தவிர வேறு யாரும்
சொல்லி மலருமா
அது நிலவைத் தவிர வேறு யாரும்
சொல்லி மலருமா சொல்லி மலருமா
ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
உறவு என்ற நூலெடுத்து
உயிர் மலரைத் தொடுத்தேன்
உறவு என்ற நூலெடுத்து
உயிர் மலரைத் தொடுத்தேன்
தொடுத்த மலரை இறைவன் கையில்
கொடுப்பதெற்கே துடித்தேன்
தொடுத்த மலரை இறைவன் கையில்
கொடுப்பதெற்கே துடித்தேன்
இறைவன் இல்லா ஆலயத்தில்
ஏற்றி வைத்த தீபம்
இறைவன் இல்லா ஆலயத்தில்
ஏற்றி வைத்த தீபம்
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன லாபம்
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன லாபம்