Raathiri Nerathu Paatu Ithu |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது
ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
ஆடை மேலாடை
காத்துல நீந்துது பாரு
ஜாடை கண்ஜாடை
சொல்லுற சேதிய கேளு
ராட்டினத்தில் உன்னை ஏத்திடுவேன்
வானின் மேலயும் பூமிக்கு கீழையும்
நடக்கும் அதிசயம் காட்டிடுவேன்
தாமரை பூவுல பூக்குற வாசத்த
மூச்சில் உனக்கு மூட்டிடுவேன்
ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
தேகம் என் தேகம்
ராத்திரி பார்க்கடலாகும்
தேடும் நீ தேடும்
அமுதம் என் மடியினில் ஊரும்
அள்ளி எடு என்னை அள்ளி எடு
ஏனோ இறங்கிடும் வலிகளின் வேகங்கள்
தரையில் நின்றால் புரியாது
ஆடு குலுங்கிடும் ஆசைய நெஞ்சுக்குள்
பூட்டி வைத்திட கூடாது
ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது
ராத்திரி நேரத்து பாட்டு இது