Raathiriyil Poothirukum

Raathiriyil Poothirukum Song Lyrics In English


ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ
ஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஅஆஅ

வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும்
மோதும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ


ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ
ஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஅஆஅ

மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ