Raga Raga Ragalada |
---|
ரக ரக ரகளடா
இவன் ரகளையோட
சகல டா ஜெக ஜெக
ஜெகமடா பல ஜெகஜாலக
முகமடா
நில நில நிலமடா
இவன் நெருப்பு நீரு களவாட
கள கள களமாட இவன்
களமாடிய குலமடா
வெத்தலையில
அழுக்கிருந்தா வேட்டியில
துடைக்கணும் புத்தியில
அழுக்கிருந்தா பொதுவுலதான்
உடைக்கணும்
நெல்லு காஞ்சு
அள்ளும் போது கல்லிருந்தா
புடைக்கணும் எள்ளுக்காய்
வெடிப்பது போல் நியாயம்
சொல்லி முடிக்கணும்
நல்லவனா வாழுறது
சிரமத்திலும் சிரமமடா
கொஞ்ச காலம் வாழ்ந்து
பாரு சிகரங்களும் பள்ளமடா
இல்லாத பேருக்கு
எப்போதும் தொண்டன்டா
பொல்லாத பயலுக்கு
இவனாலே கண்டம்டா
ரக ரக ரகளடா
இவன் ரகளையோட
சகல டா ஜெக ஜெக
ஜெகமடா பல ஜெகஜாலக
முகமடா
நில நில நிலமடா
இவன் நெருப்பு நீரு களவாட
கள கள களமாட இவன்
களமாடிய குலமடா