Raja Enbar |
---|
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்கும் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கென்று கிளையுமுண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் படைத்தானோ
இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் கலங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்