Raman Aandaalum |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
லே லே லே லே
லே லே லே லே
லே லே லே லே
அம்மனைக் கும்பிட்டா
நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே
கெட்டதை அம்மனும் கொடுக்காதே
லே லே லே லே
லே லே லே லே
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
யானையக் கொண்டாங்க
குதுரையக் கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலையெல்லாம்
தொங்கணும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு
அவளோட சேடியும் கூப்பிடு
ஏ மதுர ராஜ்ஜியம் என்னுது
ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
லே லே லே லே
லே லே லே லே
லே லே லே லே
சந்தனம் பூசுங்க
சாமிய நேரில பாருங்க
என்ன வேணும் அத கேளுங்க
லே லே லே லே
லே லே லே லே
பொன்னா பூப்பூத்து
வைரம் காயாக காய்க்கும்
என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் வெளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஏய் போனா போகுது வேல
ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
லே லே லே லே
லே லே லே லே
லே லே லே லே
பொன்னான பல்லக்கு
முல்லப்பூ மாலையும் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க
லே லே லே லே
லே லே லே லே
ஊரும் கொண்டாட
உலகம் கொண்டாட
ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்லா வாழ
நீதான் நேர்வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேந்தது
சாமியத்தான் எல்லாரும் கேக்குது
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற
சாமியப் பாத்து கேளுங்கடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லேஹோய்
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லேஹோய்