Ranga Rangaiah

Ranga Rangaiah Song Lyrics In English


ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
நல்ல பூ போல உள்ளதை காட்டு
இந்த பெண் மீது என்னத்தை மாற்று

ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

ஆஆஅ ஆஅ ஆஆ
பொய்யான கணக்கெழுதும்
வணிகர் உண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும்
மனிதர் உண்டு
தவறாக பணம் சேர்க்கும்
கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்
போனதுண்டு

நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும்
நீதி பிழைக்கவில்லை

சொர்க்கத்தை காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு


ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

ஆஆஅ ஆஆ ஆஅ
மை தீட்டும் கண்களிலே
மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே
மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க
கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர்
கவிதை உண்டு

பருவ சிலையை பக்கத்தில் வைத்து
உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக
வேதம் படிக்காதே

பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்த பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏன் இந்த நினைவு

ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே