Ranga Rangaiah |
---|
ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
நல்ல பூ போல உள்ளதை காட்டு
இந்த பெண் மீது என்னத்தை மாற்று
ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே
ஆஆஅ ஆஅ ஆஆ
பொய்யான கணக்கெழுதும்
வணிகர் உண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும்
மனிதர் உண்டு
தவறாக பணம் சேர்க்கும்
கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்
போனதுண்டு
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும்
நீதி பிழைக்கவில்லை
சொர்க்கத்தை காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு
ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே
ஆஆஅ ஆஆ ஆஅ
மை தீட்டும் கண்களிலே
மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே
மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க
கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர்
கவிதை உண்டு
பருவ சிலையை பக்கத்தில் வைத்து
உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக
வேதம் படிக்காதே
பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்த பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏன் இந்த நினைவு
ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே