Rendu Kannam |
---|
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
தானானான தானானா னானா
தானா தானன தானா தானன தானனனானா
தானா தானன தானா தானன தானனனானா
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே
தொடாதே தொடாதே
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
இருவர் : தானானனா தானாதனா தானானானனா
தானானனா தானாதனா தானானானனா