Roatoram

Roatoram Song Lyrics In English


ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

 ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

பூட்டி வச்ச
மனக்கதவு திறக்குமா கூட்டி வந்து
அன்பைக் கண்ணில் காட்டுமா

வான் நிலவு எங்கள் வாழ்வு
வளருமான்னு பார்க்குதா
வளர்வதற்கு நோன்பிருந்து
தெய்வங்களை வேண்டுதா
என்ன சொல்வதோ ஓ ஓ ஓ ஒ

ஆண் மற்றும்
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

நனான னனனா னானா நா
நன னனனா னானா நா
நனான னனனா னானா நா
நன னனனா னானா நா

எந்த நாடு போனாலும்
இந்த கூடு வேகுது
கூட்டத்தோடு வறுமையும்தான்
நாடு மாறுது

பாதி வயிறு காயுது
மீதி வயிறு தேயுது
மனுஷ சாதி மனுஷனத்தான்
உசிரை வாங்குது

ஆட்டம் காணும் வாழ்க்கையிலே
ஆட்டம் வருது அதிசயமா
பட்டப்பாடு எட்டி நிற்க
பாட்டு வரும் அதிரசமா

வெறும் வார்த்தைகள் கேட்கையிலே
குறுகுறுக்குது மனதினிலே
திருவாசகம் கோயிலிலே
கருவாசகம் தெருவினிலே

ஆதியிலே எழுதி வச்ச
பாட்டை மட்டும் கேட்டுக்கோ
காசை உள்ள பூட்டிக்கோ


ஆண் மற்றும்
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

கல்லும் மண்ணும் கலந்தாலும்
எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
கையில் வந்து பசி துடைச்சா
அது அமிர்தம் அம்மா

ஒட்டிப் போன வவுத்துலையும்
அடிக்கிற வகை ஏராளம்
தட்டிக் கேட்க தவிச்சதுண்டு
எதிர்த்துக் கேட்டமா

கல்லு முள்ளில் படுத்தாலும்
தூக்கம் வருது படு சுகமா
உக்கிரம்போல் வேதனையும்
கண் முழிக்கும் பாதகமா

உலகமெங்கும் ஏழை உண்டு
துன்பமென்னும் தொடர்பும் உண்டு
ஒட்டுப் போட்ட துணி போல
கொட்டிடாத வாழ்க்கை உண்டு

நான் படிக்கும் பாட்டு மட்டும்
வீதி எங்கும் வெடிக்கும்
ஏழை துன்பம் துடைக்கும்

ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

பூட்டி வச்ச
மனக்கதவு திறக்குமா கூட்டி வந்து
அன்பைக் கண்ணில் காட்டுமா

வான் நிலவு எங்கள் வாழ்வு
வளருமான்னு பார்க்குதா
வளர்வதற்கு நோன்பிருந்து
தெய்வங்களை வேண்டுதா
என்ன சொல்வதோ ஓ ஓ ஓ ஒ

ஆண் மற்றும்
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா