Roja Poo Aadivandhathu

Roja Poo Aadivandhathu Song Lyrics In English




ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது பூவை
கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில்
நீராடு பேசி பேசி தீராது ஆசை
என்றும் ஆறாது லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா சொன்னால்
போதுமா தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது



நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது நெஞ்சில்
அம்மாடியோ நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும்
கொதிப்பதோ சொல்லி சொல்லி
பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தேடுதே

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது




நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு மீதம்
மிச்சம் எடு மேலும்
சொல்லிக்கொடு அந்தி
பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புர நினைவில் சிந்து
படிக்குது இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது
தாங்குமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது பூவை
கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில்
நீராடு பேசி பேசி தீராது ஆசை
என்றும் ஆறாது லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா சொன்னால்
போதுமா தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது