Rosa Malare |
---|
ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே
ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே
தாலி ஒன்னு இல்லாம தூளி வரப்போகுதுன்னு சுத்தமுள்ள பன்னீரு கொட்டுதம்மா கண்ணீரு
பத்து மாத பூ வரட்டும் கண்ணுக்குள்ள நான் சுமப்பேன் தொட்டிலிட்டா நோகுமின்னு தோள்களிலே நான் சுமப்பேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன்
ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே
பூவுக்குள்ள பூவிருக்கு பூவை சுற்றி முள்ளிருக்கு முள் கிழிக்கும் முன்னாலே மூடி வைக்க ஆளிருக்கு
சின்னப் பொண்ணு குத்தமில்ல மன்னிக்கிற நெஞ்சுமில்ல கற்புக்கிது நட்டமில்ல சுற்றமிங்கே சுத்தமில்ல நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல
ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே பெரியவங்க சொல்வாங்களே